தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது
Deepika Padukone
Ranveer Singh
By Karthick Raja
பாலிவுட் நட்சத்திர ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது.

திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலானது. பின் இவர்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'துவா' என பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.
சமீபத்தில் தீபிகா - ரன்வீர் ஜோடி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்கள்.

இந்த நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.