150 கோடியில் போயஸ் கார்டனில் வீடு.. இரு மகன்கள் இல்லாமல் குடியேறிய தனுஷ்..

Dhanush Aishwarya Rajinikanth
By Edward Feb 20, 2023 04:06 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை பிரிவதாக கூறி தனியாக வாழ்ந்து வந்தார்.

மனைவியை பிரிவதற்கு முன் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு பக்கத்திலேயே கோடி மதிப்பில் நிலத்தை வாங்கி 150 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டினை கட்டி வந்தார்.

இதற்கிடையில், ஐஸ்வர்யாவுடன் தனுஷ் சேர்ந்து வாழலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மனைவியை பிரிந்து ஒரு வருடமாகியும் அது பற்றி எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.

150 கோடியில் போயஸ் கார்டனில் வீடு.. இரு மகன்கள் இல்லாமல் குடியேறிய தனுஷ்.. | Dhanush 150 Crores Poes Garden House Warming Photo

இந்நிலையில் தன் குடும்பத்தினருடன் 150 கோடி செலவில் உருவாகிய வீட்டிற்கு  குடிபுகுந்துள்ளளார் தனுஷ். சமீபத்தில் நடைபெற்ற கிரஹபிரவேச நிகழ்ச்சியில் அவரது தந்தை தாயுடன் பூஜை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிகழ்வில் தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ராஜிக்காந்துடன் இருப்பதால் பக்கத்தில் இருந்தும் அழைத்து போகவில்லையா? இல்லை, தனுஷ் அவர்களை அழைக்கவில்லையா? என்று ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

GalleryGalleryGalleryGallery