6 மாசத்துல விவாகரத்து உறுதி.. ஆனா!! காரணமே இல்லாமல் கோர்ட் வாசல் சென்ற தனுஷ் - ஐஸ்வர்யா..
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தார். அதற்காக கடந்த 2022 ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிக்கை மூலம் தனித்து வாழ்வதாக தெரிவித்தனர். அதை அறிவித்த 2 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த மனுவை ஏற்ற குடும்ப நல நீதிமன்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் விவாகரத்து கோரிய வழக்கில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விசயம் பேசுபொருளாக மாற, பல பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி விவாதம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து அக்டோபர் 6 அல்லது 8 ஆம் தேதி கிடைப்பது உறுதி என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி கூறிய விசயம் தான் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதாவது, கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய இருவரும் விவாகரத்து கேட்டு மனு கொடுத்திருக்கிறார்கள். இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என்றும் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்திருந்த போது, நாங்கள் வாங்கிய சொத்துக்களை தனுஷ், ஐஸ்வர்யா பெயரில் தான் வாங்கியிருக்கிறோம். அது எதுவுமே தனுஷ் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம்.
அதேபோல் எல்லா சொத்துக்களும் தனுஷ் ஐஸ்வர்யா பெயரில் இருக்கட்டும் என்று முடிவெடுத்து தான் அந்த மனுவை அளித்துள்ளனர். அதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி இருவரிடமும், உங்கள் இருவருக்கும் அக்டோபர் 6 அல்லது 8 ஆம் தேதி கண்டிப்பாக விவாகரத்து கிடைத்துவிடும் (இன்னும் 6 மாதத்தில்).
ஆனால், எங்களிடம் சரியான காரணத்தை கூறுங்கள். நீங்கள் கூறிய காரணங்கள் சரியாகபடவில்லை, அதை எங்களால் எடுத்துக்கொள்ளமுடியாது. சரியான ஒரு காரணத்தை நீங்கள் சொல்ல வேண்டும் என்று நீதிபதி கூறி அனுப்பியுள்ளார்களாம். இதனால் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் என்ன காரணத்தை சரியாக கூறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரிய வரும்.