18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டார்களா? மெளனமான தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து ஹாலிவுட் சினிமா வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருகிறார் தனுஷ். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிடுவதாக கூறி ஒரு அறிக்கையை தனுஷ் வெளியிட்டார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தன் பங்கிற்கு அறிக்கையை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதனை சரிசெய்ய பல்வேறு தரப்பினர் பேசி வந்துள்ளனர். ரஜினிகாந்த் பேச்சை தனுஷ் கூட கேட்காமல் 150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார்.
கூடிய சீக்கிரமே ஐஸ்வர்யாவுடன் சமரசமாகி ஜனவரி மாதம் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை தனுஷ் - ஐஸ்வர்யாவின் 18வது திருமண நாளான இன்று நவம்பர் 18 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் இருவரும் இது குறித்து எந்தவொரு விசயத்தையும் பகிராமல் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்து வருகிறார்கள். அதிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
முதலில் அவர் தான் எதையாவது ஒரு குளூ கொடுப்பார் என்று தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் 18 ஆம் தேதி காத்திருந்தனர். ஆனால் ஐஸ்வர்யா கிறிஸ்மஸ் பண்டிகைக்கு கிறிஸ்மஸ் ட்ரீ-யை தயார் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் திருமண நாள் பற்றி ய போஸ் என்று பார்க்க வந்தோம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Just couldn’t wait until the 27th…it is that time of the year when you feel only cheer ….🎄✨ pic.twitter.com/XAixiQNrfX
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 18, 2022