தனுஷ் விவாகரத்துக்கு அந்த மாஸ்டர் தான் காரணமா? என்ன ஐஸ்வர்யா இதெல்லாம்!!
நடிகை சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு பிறகு அதிர்ச்சியை கொடுத்த விஷயம் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி தான். எந்த காரணமும் அதிகாரபூர்வமாக தெரிவிக்காமல் இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக அறிவித்தனர். இதனால் குடும்பதினரும் ரசிகர்களும் இரு பிள்ளைகளுக்காக இருவரும் சேர்ந்து இருப்பது நல்லது என்று கூறி வந்தனர்.
ஆனால் தனுஷ் - ஐஸ்வர்யா இருவர்கள் மீது தவறு இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது தனுஷ் சக நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது என பல ரூமர் செய்திகள் வெளியாகியது. தற்போது தனுஷ் ஹைதராபாத்தில் மாறன் படப்பிடிப்பில் இருந்து வருகிறார்.
அதேபோல் ஐஸ்வர்யாவும் அவர் இயக்கும் ஆல்பம் பாடல் வேலைகளுக்காக ஹைதராபாத் ஓட்டலில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா பற்றி வதந்தி செய்தி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா அறிமுகப்படுத்தப்பட்ட யோகா மாஸ்டருடன் ஐஸ்வர்யா ரகசியமாக பேசி வருகிறாராம்.
யோகா சம்பந்தமான கேள்விகளை கேட்க வீடியோ கால் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதை கவனித்த தனுஷ் கண்டித்து வாக்குவாதத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் ஹைதராபாத் பார்ட்டியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று இருக்கும் போது கூட தனிமையில் யோகா மாஸ்டருக்கு வீடியோ கால் பேசிய புகைப்படம் வைரலாகியது. அந்த புகைப்படத்தை ஐஸ்வர்யாவே வேண்டும் என்றே அதை லீக் செய்துள்ளாராம்.