தொட்டதெல்லாம் ஏமாற்றம் தான்! விவாகரத்து பின் அடிமேல் அடியை தாங்கும் நடிகர் தனுஷ்..
தமிழ் சினிமாவின் உச்சன் நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்தின் தோல்விக்கு பிறகு விவாகரத்து சம்பவங்கள் தனுஷை மனதளவில் குழப்பதை ஏற்படுத்தியது.
இதையெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து படத்தில் கவனம் செலுத்தி நானே வருவேன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் வெற்றி மாறனிடம் கதை கூற கேட்டும் வேறொரு வேலையில் இருப்பதால் அவருன் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.
பின் ராக்கி, சணி காகிதம் படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் தனுஷ். தற்போது தன்னை நாடிவரும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்து வருகிறாராம்.
அதாவது படத்தின் முழு ஸ்கிரிப்டையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் அதை இரண்டு அல்லது மூன்று முறை படித்துவிட்டு பதில் சொல்கிறேன் என கறாராக கூறிவருகிறாராம்.
ஆனால் அருண் மாதேஸ்வரன் கதை இன்னும் முழுதாக ரெடியாகவில்லை. கொஞ்ச மாதம் அவகாசம் கேட்டுள்ளாராம். இதனால் இப்படமும் தனுஷுக்கு பெரிய அடியாக இருப்பதாக கூறப்படுகிறது.