அந்த காரணத்திற்காக இந்த மூன்று படங்களின் காட்சிகளை பார்க்க பிடிக்காது..தனுஷால் கண்கலங்கிய தாய்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பெரியளவில் வெற்றியை கொடுத்து கொண்டாடப்படும் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் பலர் அவமானப்படுத்தினார்கள் என்று அவரே பலமுறை கூறியிருப்பார். அதையெல்லாம் தூக்கி போட்டு தற்போது உச்சத்தின் உச்ச நடிகராக திகழ்கிறார். தனுஷ் நடிப்பில் காதல் கொண்டேன், 3 மற்றும் அசுரன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
அதிலும் அந்த மூன்று படங்களில் பல காட்சிகளில் தனுஷ் தன் சிறப்பான நடிப்பை காட்டியிருப்பார். தனுஷின் அம்மாவி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அவரை பற்றிய சில விஷயங்களை கூறியுள்ளார். அதற்கு பல பதில்கள் கூறினார். அதிலும் குறிப்பாக தனுஷ் படங்கள் பற்றி கேட்டதற்கு தனுஷ் படங்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் அதில் ஒரு சில காட்சிகள் எனக்கு பிடிக்காது என தெரிவித்திருந்தார்.
இன்றுவரை காதல் கொண்டேன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியை பார்க்கவே இல்லை என கூறினார். அதேபோல் 3 திரைப்படத்தில் தன்னை தானே கொன்று கொள்வார். அந்த காட்சியை பார்த்த தில்லை. மேலும் அசுரன் படத்தில் இவர் நடித்த ஒரு சில காட்சிகள் இன்றுவரை நான் பார்த்ததே இல்லை. தனுஷ் நடிப்பை பார்ப்பேன் ஒரு சில காட்சிகள் மட்டும் தவிர்த்து விடுவேன் என கூறினார்.
மேலும் பல படங்கள் நல்ல வெற்றியை கண்டிள்ளது. அப்படங்கள் அனைத்தும் எனக்கு பிடித்தமானவை என்று கூறியுள்ளார்.