அம்மாவின் நகையை திருடி, அதை விற்று மாட்டிக்கொண்ட தனுஷ்.. பல வருடம் கழித்து உண்மையை உடைத்த கஸ்தூரி ராஜா

Dhanush Selvaraghavan Kasthuri Raja
By Edward Aug 24, 2022 06:47 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அட்ராங்கி ரே, தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச் விழாவில் எது மாஸ் என்றால் அம்மா, அப்பாவை கடைசி வரைக்கும் குழந்தையா பாத்துக்கிறது தான் மாஸ் என்று தன் பெற்றோரை புகழ்ந்து பேசி ரசிகர்களுக்கு அறிவுரை கூறியது வைரலானது. இதனை தொடர்ந்து தனுஷ் அவர்களின் பெற்றோர்கள் சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

அதில், ஆசையாய் வெச்சிருந்த தனுஷ் அம்மாவின் செயின் வீட்டில் காணாமல் போனது. செயினை தேடியும் கிடைக்கவில்லை. தனுஷும் தன் பங்கிற்கு செயினை தேடினார். அப்படியே சென்று பல வருடம் கழித்து நான் தான் எடுத்தேன் அம்மா என்று கூறினாராம் தனுஷ்.

இப்படி பலமுறை பலவற்றை எடுத்து வெச்சிட்டு அவரே தேடுவார் என்று அவர் அம்மா கூறியுள்ளார். இரண்டாம் பெண் தனுஷுக்கு கையாள் என்று காமெடியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.