தமிழர்கள் பிச்சைக்காரர்கள்!! அதை நான் சொல்ல அவர் தான் சொன்னார்.. தன்யா பாலகிருஷ்ணா சொன்ன பகிர் தகவல்

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 02, 2024 12:30 PM GMT
Report

காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அந்த பதிவில், "தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம்" என்று ட்வீட் செய்து இருந்தார். அதன் பின்னர் தன்யா பாலகிருஷ்ணா எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் தன்யா பாலகிருஷ்ணா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று சொன்ன நடிகையை தமிழ் படத்தில் ஏன் நடிக்க வைத்தீர்கள்? என்று பலரும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

தமிழர்கள் பிச்சைக்காரர்கள்!! அதை நான் சொல்ல அவர் தான் சொன்னார்.. தன்யா பாலகிருஷ்ணா சொன்ன பகிர் தகவல் | Dhanya Balakrishna Apologized To Tamil People

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்...அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை.

அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை.

சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.