ஆர்.கே. சுரேஷுடன் நின்றுபோன திருமணம்.. மீண்டும் புதிய திருமணத்திற்கு ரெடியான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷை காதலித்து வந்துள்ளார்.
ஆனால், சில பிரச்சையின் காரணமாக ஆர்.கே. சுரேஷுடன், நடிகை திவ்யாவிற்கு இருந்த காதல் உறவு முறித்துள்ளது. இதன்பின், ஆர்.கே. சுரேஷ் வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். காதல் முறிவிற்கு பின், திருமணம் குறித்து பேசாத நடிகை திவ்யா முதல் முறையாக மீண்டும் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்விக்கு அழகாக பதிலளித்து வந்தார். அந்த வரிசையில் உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர் ஒருவர், திவ்யா கணேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நடிகை திவ்யா கணேஷ், விரைவில் எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், யார் மாப்பிள்ளை என்று தெரியவில்லை.
