நாக சைதன்யா நிச்சயதார்த்தத்திற்கு சித்தி அமலா வந்தாரா? இல்லையா?
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து அவரை காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவுடன் ரகசிய காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார் நாக சைதன்யா. அதெல்லாம் உண்மை தான் என்பதற்கேற்ப நேற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தை முடித்திருக்கிறார் நாக சைதன்யா. இந்த தகவலை நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
திருமணமாகி இருவரும் படங்களில் நடித்து ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்தும் வந்தனர். இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நாகர்ஜுனாவின் இரண்டாம் மனைவியும் நடிகையுமான அமலா அக்கினேனி நாக சைதன்யா - சோபிதா நிச்சயத்தார்த்தத்தில் கலந்து கொள்ளவில்லையாம். நாகர்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமிக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா.
சமீபத்தில் பேட்டியொன்றில் கூட நாக சைதன்யா, நாக சைதன்யா என்னுடன் வளரவில்லை. சென்னையில் அவர்களது தாயுடன் தங்கியிருந்தார். அவ்வப்போது ஹைதராபாத் வந்து செல்வார் என்று கூறியிருந்தார் அமலா. தன் சொந்த மகன் அகில் அக்கினேனி விசேஷத்தில் முதல் ஆளாக நிற்கும் அமலா, நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்தில் ஏன் காணவில்லை என்று கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
அதற்கு காரணம், நாக சைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்த போது அவருடன் அமலா நெருக்கமாக பழகி வந்தாராம். ஆனால் சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்ததில் இருந்து அவருடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டாராம் அமலா என்று டோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்தது.
அமலா அக்கினேனியுடன் எடுத்த புகைப்படங்களை நாகர்ஜுனா போடாதது தான் தற்போது எழுந்துள்ள சந்தேகத்திற்கு காரணம். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றாரா? இல்லையா? என்ற கேள்வியும் தற்போது டோலிவுட்டில் பேசுபொருளாக மாறி வருகிறது.
ஆனால், நிச்சயத்தார்த்திற்கு அமலா வந்து குடும்பத்துடன் புகைப்படத்தையும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

