ஜெயம்ரவியால் தாக்கப்பட்டாரா விஜய், மகேஷ் பாபு.. விக்ரமால் ஏற்பட்ட குழப்பம் வைரலாகும் வீடியோ

Jayam Ravi Karthi Vijay Vikram Mahesh Babu
By Edward Oct 07, 2022 01:30 PM GMT
Edward

Edward

Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான படம் பொன்னியின் செல்வன். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் 500 கோடி செலவில் இரு பாகங்களாக உருவாகி தற்போது மிகப்பெரிய வரவேற்பும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

ஜெயம்ரவி கேலி செய்த நடிகர் யார்

7 நாள் முடிந்த நிலையில் 340 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெற்றிப்பெற முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டை தாண்டி இந்தியா மற்றும் உலகளவில் பிரமோஷன் செய்ததுதான். அப்படி படம் வெளியாகும் முன் படக்குழுவினர் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்தியா முழுவதும் சென்று பல மொழிகளில் பேட்டிக்கொடுத்து வந்தனர்.

அப்படி தமிழில் தொகுப்பாளினி பாவனா எடுத்த ஒரு பேட்டியொன்றில் சியான் விக்ரம் ஜெயம் ரவி பற்றிய சில சம்பவங்களை சுவாரஷ்யமாக கூறியுள்ளார். ஒரு முறை துருவ் விக்ரம் ஷூட்டிங்கிற்கு வந்தபோது, ஜெயம்ரவியை பார்த்து ஹாய் பொன்னியின் செல்வன் என்று கூறியுள்ளார். அதற்கு ஜெயம் ரவி ஹாய் கென்னியின் செல்வன் என்று கூறியுள்ளார்.

விஜய் - மகேஷ்பாபு ரசிகர்கள் சண்டை

மேலும் பேசிய விக்ரம், விமானத்தில் பயணித்த போது ஜெயம்ரவி என்னிடம் பேசிய போது, ஏன் அந்த நடிகர் அம்மா செத்தாலும் அதே ரியாக்ஷன், காதல் வந்தாலும் ஒரே எக்பிரஷன் எல்லாத்துக்கும் ஏன் ஒரே எக்பிரஷ்ன் கொடுக்குறாரு என்று கிண்டல் செய்தார். அவரை எனக்கு நல்லா தெரியும் என் நண்பர் என்று கூறினேன். அதான் எப்படிங்க என்று ஷாக்காகி கேட்டுள்ளார் ஜெயம்ரவி. உங்கள் நண்பராக இருந்து இப்படி நடிக்கிறாரே ஏன் என்று மறைமுகமாக கேட்டுள்ளார்.

தற்போது அந்த நடிகர் யார் என்றும், விஜய் அல்லது மகேஷ் பாபுவை தான் கூறுகிறார் என்றும் ஒரு போரே இணையத்தில் நடந்து வருகிறது. விஜய் மீது நல்ல ஒரு மரியாதை வைத்திருக்கிறார் ஜெயம்ரவி அதனால் அவரை கூறி இருக்கமாட்டார். அது மகேஷ் பாபு தான் என்று விஜய் ரசிகர்கள் சொல்ல, அது விஜய் தான் கூறியுள்ளார் என்று மகேஷ் பாபு ரசிகர்கள் மாறிமாறி சண்டைப்போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே இதுகுறித்து ஜெயம் ரவி டிடி நிகழ்ச்சியில் கூறிய வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.