ஆட்டோகாரரிடம் சண்டை போட்ட நடிகை நயன்தாரா!! தாய் பாசத்துல நயன் செய்யும் அலப்பறை..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா சமீபகாலமாக தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வெளிநாட்டு பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்.
விக்னேஷ் சிவனை காதலித்து 10 ஆண்டுகளை நிறைவு செய்து அதை கொண்டாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் பிஸியாக படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் நயன் தாரா சென்னை எக்மூர் பகுதியில் இருக்கும் பெரிய அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார்.
குழந்தைகளை மாலை நேரங்களில் கீழே விளையாடவிடுகிறாராம். அந்நேரத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் போது ஏதாவது ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் மற்றவர்களிடம் சண்டை போடுவாராம். அப்படி அபார்ட்மெண்ட் உள்ளே ஒரு ஆட்டோ ஓட்டுநர் வேகமாக வந்திருக்கிறார்.
வேகமாக வந்ததை பார்த்து நயன்தாரா அவரிடம் சண்டை போட்டிருக்கிறார். அதேபோல், உணவு டெலிவரி பாயிடம் கத்தி பேசியதற்கும் சண்டை போட்டிருக்கிறார்.
இதுபோல் ஏராளமானவர்களிடம் நயன் தாரா சண்டை போட்டிருக்கும் நயன் தாரா மீது அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்களாம். குறித்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் கசியவிட்டிருக்கிறார்.