சீமானை கருவாயானு கூப்பிட முடியவில்லை - பாலா உருக்கம்

Seeman Bala
By Kathick Apr 06, 2026 09:30 AM GMT
Report

இயக்குனர் பாலா எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். யாருக்கும் இவர் அஞ்சி பேசியது கிடையாது.

இந்நிலையில் பாலா சமீபத்தில் சீமான் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது, அதில் கலந்துக்கொண்டார்.

சீமானை கருவாயானு கூப்பிட முடியவில்லை - பாலா உருக்கம் | Director Bala Talk About Seeman

அப்போது பாலா, எனக்கும் சீமான் அண்ணனுக்கும் 25 வருடங்கள் மேலாக நட்பு, என்றாவது நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தால் அவரை கருவாயா என்று தான் அழைப்பேன். ஆனால், இன்று அவர் அரசியலில் பெரிய இடத்தில் உள்ளார், இப்பொழுது அவரை கருவாயா என்று கூப்பிட முடியவில்லை என உருக்கமாக பேசினார்.

மேலும், சீமான் அண்ணன் என் மேல் கோபப்பட்டால் என்னை வாங்க, போங்க என்று தான் பேசுவார், அதிலே தெரிந்துகொள்ளலாம் அவர் என் மேல் கோபமாக உள்ளார் என்று என பாலா பேசினார்.