இயக்குனர் கொடுத்த காசோலை!! பெரிய பிரச்சனையில் மாட்டிய சிவகார்த்திகேயன்.. விஜய் பட இயக்குனர்
நடிகர் விஜய் நடிப்பில் 1999ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குனராகனவர் தான் இயக்குனர் எழில். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, தீபாவளி, மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துறை, வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானார் இயக்குனர் எழில்.
தற்போது தேசிங்கு ராஜா 2, ஜகஜால கிள்ளாடி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சிவகார்த்திகேயன் பற்றிய ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார்.
மனம் கொத்தி பறவை படத்திற்கு பின் ஏன் சிவகார்த்திகேயனுடன் இணையவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் எழில், சிவகார்த்திகேயனுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தேன், ஆனால் அதை அக்கவுண்ட்டில் போடவில்லை.
அதற்குள் மூன்று நான்கு பேர் நான் செக் கொடுத்துவிட்டேன் என்று கூறி சிவகார்த்திகேயனை வற்புறுத்தினார்கள். அதன்பின் பெரிய பிரச்சனையில் சிக்கி சுற்றி, வழக்கு வரை சென்றார் சிவகார்த்திகேயன். அப்படி இருக்கும் போது சிவாவுக்கு செக் கொடுத்துவிட்டேன், காசை அக்கவுண்ட்டில் போட்டுவிடுவாரோ என்ற பயம் எனக்கு இருந்தது.
என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருக்க, அப்போது பிரச்சனையின் உச்சத்தில் இருந்ததால் சிவாவை நெருங்க முடியவில்லை. 2 மாதம் காத்திருந்தேன், டைம் இல்லாமல் போக நான் நடிகர் விமலை வைத்து தேசிங்கு ராஜா படத்தை இயக்க சென்றுவிட்டேன்.
அதன்பின் சிவகார்த்திகேயனும் வேறவேற படத்தில் கமிட்டாக, அப்படியே வேறு இடத்திற்கு சென்றுவிட்டார் சிவகார்த்திகேயன் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் எழில்.