இளையராஜாவுக்கு வக்காலத்து வாங்கி பேச்சு!! கொந்தளித்த இயக்குனரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட பிரபலம்..
சினிமா நட்சத்திரங்களை பற்றி யாருக்கும் தெரியாத தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ரகசியத்தை சமுகவலைத்தளங்களில் பேட்டி கொடுத்து பகிர்ந்து வருபவர் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு. அப்படி இளையராஜாவை பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் செய்யாறு பாலு.
அதில் 96 மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது பற்றி கூறியும் 96 படத்தின் போது இளையராஜா தகாத வார்த்தை ஒன்றை பேசியிருந்ததாகவும் பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியது பற்றியும் செய்யாறு பாலு பேசி இருந்தார்.
இதற்கு 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் பதில் அளித்திருக்கிறார். அதில் இளையராஜாவை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக மற்றவர்களை சிறுமைப்படுத்தி பேசாதீர்கள். மேலும் அப்பாடல்களை பயன்படுத்தும் முன் பணம் கொடுத்து முறையான அனுமதி பெற்றுவிட்டோம்.
படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு
கேட்டதாக அவர் சொல்வது முற்றிலும் தவறு. சினிமா
என்பது சினிமாத்துறையினருக்கு மட்டுமல்ல அதைப்பற்றி
செய்தியை வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கும்
சொந்தமானது எனவும் அதை பாதுகாப்பது இருவரின்
கடமை எனவும் குறிப்பிட்டு இயக்குனர் பிரேம் குமார்
பேசியிருந்தார். செய்யாறு பாலுவையும் பயில்வானையும்
தான் அவர் இப்படி பேசியிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.