விஜய்யை 5 நிமிஷம் கூட பார்த்து பேசவிடல!! புலம்பிய ஷாஜகான் பட நடிகர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தான் கமிட்டாகிய படங்களில் மட்டும் நடித்து விட்டு ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் பணிகளில் முழு நேரமாக எடுத்து செய்யவுள்ளதாக அறிக்கை வெளியிட்டார். இதனை தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்த கருத்துக்களை பிரபலங்களும் பொதுமக்களும் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் நடிகர் விஜய் நடிப்பில் 2001ல் வெளியான ஷாஜகான் படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகர் தேவகரண் கிருஷ்ணா விஜய் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் தன்னிலை கொண்டவர். யாரிடம் தேவையில்லாத கருத்தையும் தப்பாகவும் பேசமாட்டார். அரசியல் அவருக்கு சுலபம் தான் என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் 4 வருடத்திற்கு முன் மலையாள படத்தில் நடித்திருந்தேன். ஷூட்டிங் பக்கத்தில் விஜய் இருந்ததை தெரிந்து அவருடன் பேச நினைத்தேன். என்னுடைய மேனேஜருக்கு விஜய் மேனேஜரின் நம்பர் தெரிந்து வாட்ஸ் அப் செய்தேன். அப்போது கால் செய்த போது, என்னை அறிமுகபடுத்தி ஷாஜகான் படத்தில் நடித்தேன், 5 நிமிடம் பேச வேண்டும் என்று கூறினேன்.
4, 5 முறை கால் செய்து எடுக்கவில்லை அதன்பின் எடுத்துவிட்டு என்னிடம் விஜய் மேனேஜர், அவரை பார்க்கலாம் முடியாது, அவர் ஷாஜகான் விஜய் கிடையாது. பெரிய அளவிலாகிவிட்டார் என்று கூறினார். அதனால் நான் கஷ்டப்பட்டேன். அவர் எதற்கு அப்படி பண்ணனும், நான் அவரிடம் காசு வாங்கவா போறேன்.
நான் வெளி ஆல் கிடையாது, அவருடன் நடித்த நடிகர், 2 நிமிடம் பேச கேட்டேன் முடியாதுன்னு சொல்லிவிட்டார். அப்படி விஜய்யை பார்க்கிறதே பெரிய விசயம். இதன்பின் அவருடன் பேச வாய்ப்பு கிடைக்காது. அப்படி கிடைத்தால் கடவுளிடம் இருக்கிறது. இது கஷ்டம் கிடையாது ஒருவரின் வாழ்க்கையின் மாற்றம் தான் என்று நடிகர் தேவகரண் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.