நரம்பு இல்லாமல் பேசும் நாக்கு..ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்தில் தனுஷ் காரணமா!! கொந்தளித்த பிரபலம்..
ஜெயம்ரவி - ஆர்த்தி விவாரகத்து
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சைரன் படத்திற்கு பின் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், 15 வருடமாக ஆர்த்தியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ஜெயம் ரவி.
சில தினங்களுக்கு தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார். இவர்களின் விவாகரத்துக்கு காரணம் ஆர்த்தியிம் அம்மாதான் என்றும் அவர் தத்து எடுத்து வளர்க்கும் ஒருவரின் முடிவுகள்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷின் தலையீடு
இந்நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்தில் நடிகர் தனுஷின் தலையீடு இருப்பதாக கூறி இணையத்தில் பல கருத்துக்களை பரவி வருகிறது. இதுகுறித்து சினிமா விமர்சகர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில் கொந்தளித்து பேசியிருக்கிறார்.
ஆர்த்தியின் அதீத காதல்தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்ய வைத்ததாக்வும் ஜெயம் ரவியை சினிமாவில் வளர்த்துவிட்டது அவர் தந்தை எடிட்டர் மோகன் மற்றும் அண்ணன் தான். ஜெயம் படம் தொடங்கி பல படங்களை தன் தம்பிக்காக ராஜா கொடுத்திருக்கிறார்.
திருமணத்திற்கு பின் ஜெயம் ரவியின் சினிமா டேட் ஆகியவற்றை ஆர்த்தி குடும்பம் தான் பார்த்து வந்தனர். பல படங்களை புக் செய்து நிற்கக்கூட நேரம் இல்லாத அளவுக்கு ஜெயம் ரவி லாக் செய்துள்ளனர். அப்படி மோகன் ராஜா தனி ஒருவன் 2 பாகத்தை எடுக்க வந்தபோது ரவியால் டேட் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
அந்தணன்
மற்றொருபுறம் ஆர்த்தி, அதீத காதலால் ஜெயம் ரவியை உளவு பார்க்க ஆள் அமைத்துள்ளார். சூட்டிங்கில் இரவு 12 மணிக்கு கூட கால் செய்தும் வீடியோகால் செய்தும் ஜெயம் ரவியை சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன கஷ்டத்தில் ஜெயம் ரவி உள்ளாகினார். ஒரு மாதமாக ஜெயம் ரவி கோவாவிற்கு சென்று செட்டிலாகிவிட்டார்.
இதற்கிடையில் சிலர் தனுஷும் ஆர்த்தியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இதுதான் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். இதைவிட அசிங்கம் எதுவும் கிடையாது. தயவுசெய்து அதைவிட்டுவிடுங்கள். இதற்கும் தனுஷுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள், அதை யோசித்து பேசுங்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.