இறந்த பின் என் உடல் உறுப்புகளை!! திருமணமாகி 2 ஆண்டில் நடிகை மகாலட்சுமி ஓப்பன் டாக்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2022ல் திருமணம் செய்து கொண்டார். திடீர் திருமணத்தை, அதுவும் ஃபேட்டாக இருக்கும் நபரை திருமணம் செய்ததை பலரும் விமர்சித்தனர். அதையெல்லாம் கடந்து சமீபத்தில் ஒரு ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேல் இருவரும் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு பண மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து விடுதலையானார் ரவீந்தர். இதன்பின் மகாலட்சுமியும் ரவீந்தரும் அவர்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.
சமீபத்தில் மகாலட்சுமி ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், தனது பிறந்த நாளன்று விலைமதிப்பற்ர பரிசை வழங்க முடிவு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
தான் இறந்த பின் எனது உடல் உறுப்புக்களை தானம் செய்கிறேன், இதன்மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். நான் இறந்த பின் என் உறுப்புக்கள் மற்றவர்கள் வடிவில் வாழும் என்று கூறி ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார் மகாலட்சுமி. இதனை பலர் மகாலட்சுமியை பாராட்டியும் பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.