பிரபல தாதாவுடன் தொடர்பு!! போலிஸ் வளையத்தில் சிக்கிய பிசாசு பட நடிகை பிரயாகா..
பிரயாகா மார்ட்டின்
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பிசாசு. இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழில் அறிமுகமாகினார் நடிகை பிரயாகா மார்ட்டின். தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் ஓரளவுக்கு வாய்ப்பு பெற்று நடித்து வந்தார் பிரயாகா.
அங்கு பிசியான நடிகையாகவே வந்த பிரயாகா, சமீபகாலமாக அவரது படங்கள் வெளியாகாத நிலையில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய பிரபல தாதா சம்பந்தமாக சிக்கியிருக்கிறார்.
பிரபல தாதா ஓப் பிரகாஷ் தங்கிருந்த ஓட்டலுக்கு சென்று அவரை நடிகை பிரயாகா மார்ட்டி மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஷியும் சந்தித்ததாக கூறி போலிசாரின் விசாரணை வலையத்தில் சிக்கினார்கள். தற்போது இதுகுறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தாதாவுடன் தொடர்பு
கொச்சியில் இருக்கும் ஒரு ஓட்டலில் தாதா ஓம் பிரகாஷ் தங்கி இருந்தபோது அக்டோபர் 6 ஆம்தேதி போலிசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது அறையில் எட்டு மதுபாட்டிகளும் குறிப்பிடத்தக்க அளவில் கொக்கைன் என்ற போதை பொருளும் கைப்பற்றப்பட்டது.
அவரின் செல்போன் அழைப்புகளை சோதனை செய்தபோதும் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரு நட்சத்திரங்களும் அங்கே வந்து சென்றதாக கூறப்படுகிறது. தாதா ஓப் பிரகாஷ் மதுபானங்கள், போதைப்பொருட்கள் கடத்திலில் மிகப்பெரிய தொடர்புடைய நபர் என்பதால் போலிசார் அவரை தேடி கைது செய்துள்ளது.
தற்போது இவருடன் தொடர்பில் இருந்தவர்கள், ஓட்டலில் சந்திக்க வந்தவர்கள் உடபல பலரை போலிசாரி விசாரிக்கவுள்ளனர். அதனால் நடிகை பிரயாகா மார்ட்டின் மற்றும் ஸ்ரீநாத் பாஷி இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.