நடிகையிடம் 70 வருஷம் கால்ஷீட் கேட்ட பொன்வன்னண்.. சரண்யா விஷயத்தில் பஞ்சாயத்து செய்த பாரதிராஜா..
தமிழ் சினிமாவில் அம்மா நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சரண்யா மற்றும் நடிகர் பொன்வண்ணன், இருவரும் கருத்தம்மா படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் நடித்து பிரபலமானார்கள்.
பல படங்களில் இருவரும் பணியாற்றி பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சரண்யா - பொன்வண்ணன் ஜோடிக்கு இரு மகள்கள் இருப்பதாகவும் இருவரும் மருத்துவர்களாக இருப்பதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
சரண்யா - பொன்வண்ணன் காதல்
சமீபத்தில் தன்னுடைய காதல் கதை குறித்து இருவரும் தனித்தனியாக பகிர்ந்து கொண்ட விஷயம் வெளியாகியுள்ளது. தன் காதலை சரண்யாவிடம் கூறிய பொன்வண்ணன், 70 ஆண்டுகள் கால்ஷீட் கேட்டாராம். என்ன இவர் இப்படி பேசுகிறார் என்று யோசித்து நடிகை சரண்யாவும் தன்னுடைய அப்பாவிடம் இதுகுறித்து பேச இயக்குநர் பாரதிராஜாவும் பொன்வண்ணனுக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் என்று சரண்யா பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அவரை தொடர்ந்து பொன்வண்ணன் அளித்த பேட்டியில் தன் வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் கருத்தம்மா ஷூட்டிங்கில் சரண்யாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் பாரதிராஜாவுடன் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியபோது, சரண்யாவிடம் 70 ஆண்டுகள் கால்ஷீட் கிடைக்குமா? என்று கேட்டதற்கு, அவர் யோசித்து கூறுவதாக கூறியிருக்கிறார்.
பஞ்சாயத்து செய்த பாரதிராஜா
பின் சரண்யாவிடம் தான் அதிகமான காதலுடன் இருப்பதாக எல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை எல்லாம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியதாக பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
பின் சரண்யா, அவரின் அப்பாவிடமும் பொன்வண்ணன் இயக்குநர் பாரதிராஜாவிடமும் கூறியிருக்கிறார்கள். பாரதிராஜா சரண்யா அப்பாவிடம் பொன்வண்ணனைவிட சிறந்த மாப்பிள்ளை கிடைக்கமாட்டார் என்று சர்டிஃபிகேட் கொடுத்ததுடன் வீட்டிற்கும் சென்று பேசியதாகவும் பொன்வண்ணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.