செக் வைத்த ஆதி குணசேகரன், திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்!

Sun TV Ethirneechal TV Program
By Bhavya Oct 27, 2025 07:30 AM GMT
Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு எபிசோடின் ப்ரோமோவும் அன்றைய நாளில் வெளிவரும். தற்போது குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.

இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் துப்பாக்கியை வைத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறார்.

செக் வைத்த ஆதி குணசேகரன், திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்! | Ethirneechal Serial Next Promo Goes Viral

பரபரப்பு!  

குணசேகரன் என்னுடைய அனைத்து விஷயத்தையும் கொடு என கேட்க சக்தி, உங்களது போனையா இல்லை நீங்கள் சொத்து எழுதிவைத்து விட்டேன் என உங்களது தம்பிகளை ஏமாற்றி வைத்துள்ளீர்களே அதையா என கேட்கிறார்.

இதனால் சக்தியின் சட்டையை பிடித்து கோபத்தை காட்டுகிறார் குணசேகரன். பின் ஜனனி கடிதமா என கேட்க என்ன Letter என குணசேகரன் கேட்கிறார்.

அப்போது நல்லதா போச்சு அந்த கடிதம் எங்களிடமே இருக்கட்டும் என்கிறார் ஜனனி. அடுத்து சக்தி-ஜனனி வீடியோ வாங்க கெவின் நண்பரை சந்திக்க செல்ல அவரை யாரோ ஒருவர் சுட்டுக்கொல்கின்றனர்.