தன் குழந்தையின் வருங்கால அம்மா.. நயன் தாரா அப்படின்னு சொன்னீங்களே விக்கி அதெல்லாம் பொய்யா!!

Nayanthara Vignesh Shivan
By Edward Aug 12, 2022 06:08 AM GMT
Edward

Edward

Report

நடிகர் நயன் தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூனுக்காக தாய்லாந்தில் ஒரு வாரம் இருந்துவிட்டு படங்களி கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் நயன்தாரா.

பின் விக்னேஷ் சிவனும் செஸ் ஒலிம்பியாட் பணியில் பிஸியாகினார். தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு அவுட்டிங் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினுக்கு போகும் முன் நயன் தாரா, விக்னேஷ் சிவன் செய்த உணவை சாப்பிட்டு வாந்தி-மயக்கம் எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார் என்ற செய்தியும் வெளியாகியது. வாந்தி-மயக்கம் என்று கூறியதும் ரசிகர்கள் நல்ல விசயம் தான் என்று நினைத்து விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

ஆனால் அது உணவு சாப்பிட்டதால் தான் என்று தெரிந்ததும், கேள்வி கேட்க ஆரம்பித்து வருகிறார்கள். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நயன் தாரா கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அன்னையர் தினத்தன்று வெளியிட்ட அந்த பதிவில் தன் குழந்தையின் வருங்கால அம்மா என்று கூறியிருந்தார். அப்படி கூறிவிட்டு ஏன் இன்னும் தாமதம் என்றும் அதே பதிவில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.