கோரஸ் பாடுறவங்களே பாடிருக்கலாம்.. கீர்த்தி சுரேஷை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மகாநடி படத்தில் நடித்து அதற்கான தேசிய விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் பிரமோஷனுக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமபா சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கண்ணாளனே
நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ், பாம்பே படத்தில் இடம்பெற்றிருக்கும் கண்ணாளனே எனது கண்ணை என்ற பாடலை பாடியிருக்கிறார். அவரது பாட்டை கேட்ட நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷை கலாய்த்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.