தேவையற்ற கருத்து கூறிய நெட்டிசன்! கடும்கோபத்தில் தகாதவார்த்தையில் சீரியல் நடிகை பரீனா..
தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலாக திகழ்ந்து வருவது பாரதி கண்ணம்மா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் டி ஆர்பியில் தற்போது முதல் இடத்தினை பிடித்துள்ளது. சீரியலில் பாரதி கண்ணம்மா பற்றி பேசப்படுவதை விட வெண்பா கதாபாத்திரம் தான் அதிகளவில் உச்சரிக்கும் பெயராகவுள்ளது.
அந்த அளவிற்கு நடிப்பை காட்டி வரும் வெண்பாவாக நடிகை பரீனா நடித்து வருகிறார். தற்போது கர்ப்பமாக இருப்பதால் அதிக காட்சிகளில் நடிக்க வைப்பதில்லை. சீரியலை விட தற்போது போட்டோஷூட்டிற்கு முழு கவனம் செலுத்தி வரும் பரீனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வயிற்றில் மெகந்தி வைத்து காமித்தபடி புகைப்படங்களை வெளியிட்டதற்கு பலர் விமர்சித்து வந்தனர். தற்போது கத்தியை கையில் வைத்து கொண்டு போட்டோஷூட் எடுத்துள்ளார்.
இதை பார்த்து பலரில் ஒருவர், ர்ப்ப காலத்தில் ஏன் இத்தனை போட்டோ ஷூட்? ஏதோ இந்த உலகத்திலேயே நீ மட்டும் தான் கர்ப்பமா இருக்குற மாதிரி என கண்டபடி மெசேஜ் செய்துள்ளார்.
நான் மாடலிங் துறையை சேர்ந்தவள், குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் எந்த வேலை உடல்நிலை சரியில்லாம அல்லது கர்ப்பமோ அது என் வேலை. எனக்கு ஏன் தெரியவில்லை இதனால் ஏன் உங்களுக்கு அங்க எரிகிறது என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் பரீனா.