விஜய்யை தொடர்ந்து தந்தையை கைவிட்ட சூர்யா.. இதற்கெல்லாம் காரணம் ஜோதிகாவா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அந்தஸ்தில் இருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவரின் 42 வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படம் பிரமாண்ட தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் பல கோடி மதிப்புள்ள புது வீடு வாங்கி குடியேறியுள்ளார். மேலும் பிரமாண்ட பிளாட் ஒன்று வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
சூர்யா மும்பையில் குடியேறியது அவரின் தந்தை சிவகுமாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் இவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக ஜோதிகா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த விஷயம் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்று சினிமா பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
விஜய்க்கும் அவரின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் இடையே ஏற்பட்ட பிரச்சினையைப் போல தற்போது சூர்யாவுக்கும் சிவகுமாருக்கு சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
You May Like This Video