அதுக்கு மட்டும் தான் அப்படி பண்ணுவேன்!! டாட்டூ பற்றி நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஓபன் டாக்..
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா, ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கன்னட பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
டாட்டூ
சமீபத்தில் ரச்சிதா அளித்த பேட்டியொன்றில், நான் நிறைய டாட்டுக்களை போட்டிருக்கிறேன், தியேட்டர் மாஸ்க் டாட்டூ ஒன்றையும் போட்டிருக்கிறேன்.
இதெல்லாம் என் வாழ்க்கை முழுக்க கூடவே வருமோ, அதை மட்டும் தான் டாட்டூவாக நான் போட்டிக்கிறேன். மற்ற விஷயங்களை டாட்டூவாக நான் போடுவதில்லை என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.