பவதாரிணிக்கு தெரியாமல் அவருடைய கையெழுத்து போட்டு பல லட்சம் மோசடி.. கங்கை அமரன் பகிர் குற்றச்சாட்டு
தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா செயல் செயல்பட்டு வரும் நிலையில் அவர் மீது பல குற்றச்சாற்றுகளை முன் வைத்து இருக்கிறார் கங்கை அமரன்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கங்கை அமரன், இது இளையராஜா அமர்ந்திருக்க வேண்டிய இடம். எங்களுடைய வீட்டில் நடந்த துக்க நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியும். அந்த காரணத்தால் தான் அவரால் இங்கு வரமுடியவில்லை. அவருக்கு பதிலாக நான் பேசுகிறேன். திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் தான் பதவி என்பது விதி.
ஆனால் தீணா அதிகாரத்தை பயன்படுத்தி நான்கு ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டார். இனி அவர் அந்த பதவியில் இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார். பதிவியில் இருப்பதை காட்டிலும் சங்கத்தை திறம்பட வழிநடத்த வேண்டும். இது தான் இளையராஜா போன்றவர்களின் கருத்தாக இருக்கிறது.
கொரோனா சமயத்தில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு பணம் கொடுத்ததாக கையெழுத்து போட்டு சில ஆவணங்களை சமர்பித்து இருக்கின்றனர். மறைந்த பவதாரிணியின் கையெழுத்தை அவருக்கே தெரியாமல் போட்டு உள்ளனர். இதனால் ரூ.80 லட்சம் வரை அவர்கள் பணத்தை சுருட்டி இருக்கிறார்கள் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.