என் கணவர் அந்த இடத்தை மோப்பம் பிடிப்பார்!! பாலிவுட் நடிகை கெளஹர் கான் ஓபன் சீக்ரெட்..
பாலிவுட் சினிமாவில் பிரபல தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் தான் ஜெளஹர் கான் - சைத் தர்பார். சோசியல் மீடியாகளில் எப்போதும் தங்களின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள், வீடியோகளை பகிர்ந்து வரும் இந்த ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை நேஹா தூபியா, அங்கத் பேடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் டபிள் டேட் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் தான் ஹெளஹர் கான் - சைத் தர்பார் இருவரும் பங்கேற்றுள்ளனர். அப்போது ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை கெளஹர் கான்.
திருமண நாளை நினைவு கூர்ந்தவர், நிகாஹ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை சிரித்தபடி பகிர்ந்துள்ளார். திருமண சடங்குகளை நடத்த மெளலானா வந்து சேர்ந்தார். அப்போது திடீரென சைத் தர்பார் கழிவறைக்கு ஓடிவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

மேலும், தன்னுடைய கணவருக்கு இருக்கும் வித்தியாசமான பழக்கம் ஒன்றுள்ளது. சைத் தர்பாருக்கு என்னுடைய அக்குள்களின் வாசனையை மோப்பம் பிடிப்பது பிடிக்கும். அடிக்கடி தன்னுடைய அக்குள்களை தொட்டு வாசனை பிடிப்பார். சைத்திற்கு என்னுடைய அக்குள்கள் எப்போதுமே நல்ல வாசனையுடன் இருப்பதாக தோன்றும்.
அவர் அடிக்கடி அதை தொட்டு மோப்பம் பிடிப்பார். அதன்பின் தன்னுடைய சகோதரியிடம் சென்று பார் அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது என்று கூறுவார். அதற்கு அவர் சகோதரி, நீங்கள் இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்பார் என்று கெளஹர் கான் சிரித்தபடி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.