16 வயதில் பிரபுதேவா தோளில் கால் போட்டதை எப்படி பேசுனாங்க தெரியுமா!! புலம்பிய நடிகை..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகையாகவும் நடன இயக்குனராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் இருந்த காயத்ரி, வாய்ப்பில்லாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் அரசியல் கட்சியில் பணியாற்றி அதன்பின் அதிலிருந்து வெளியேறினார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். என் சிறுவயதில் என் அப்பாவிடம் என்னை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் கேட்டார்கள். ஆனால் நடிப்பதில் பயம் என்பதால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். அதனால் அஞ்சலி, கேளடி கண்மணி படத்தில் நடிக்க கேட்டு நான் மறுத்துவிட்டேன். பின் வளர்ந்த பின் வாய்ப்புகள் என்னை நோக்கி வந்தது.
மேடை நிகழ்ச்சிகளில் இதற்கிடையில் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களோடு நான் நடனமாட ஆரம்பித்து பத்தாம் வகுப்பு படிக்கும் போது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது என்னால் அதில் நடிக்க முடியவிலை பின் நடிக்கலாம் என்ற முடிவை எடுத்தேன். அப்போது சார்லி சாப்ளின் படவாய்ப்பு வந்ததும் காமெடி படங்கள் பிடிக்கும் என்பதால் யார் நடிக்கிறார் என்று கூட பார்க்காமல் ஓகே சொல்லிவிட்டேன்.
பிரபுதேவாவுடன் நான் நடிக்கும் போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. காரணம் என்னவென்றால் அதில் நடித்த எல்லோரும் எனக்கு சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கம் என்பதால் நான் கொஞ்சம் ஆண்மகன் போல நடந்து கொள்வேன். பிரபு சாருக்கு தான் ஒரு பெண் போல் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தேன். பிரபு சாரை பொறுத்தவரை நடிகைகளுக்கு அதிக ஸ்பேஸ் கொடுத்து அவர்கள் நன்றாக தெரியும் படி நடனத்தை வடிவமைப்பார்.
அப்படி தான் அந்த பாடலில் பிரபு தேவாவின் தோள் மீது காலை போட்டு நடனமாடி இருப்பேன். அது பேசு பொருளானது. ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவயது பெண்ணாக இருந்தேன். யார் என்ன சொன்னாலும் பெரிதாக கண்டுக்கொள்ளமாட்டேன். அப்படத்தின் மூலம் எனக்கு நிறைய ரசிகர்களாக மாறினார்கள் சிலர் என்னை கடுமையாக திட்டவும் செய்தார்கள். ஆனால் எனக்கு அப்போது 16 வயது என்பதால் எதுவும் என் காதில் விழவில்லை என்று வெளிப்படையாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.