இங்க யாரும் சுத்தம் இல்லை!! சுச்சி லீக்ஸ் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை காயத்ரி ரகுராம்..
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிகையாக நடன இயக்குனராகவும் பணியாற்றி பிரபலமானவர் நடிகை காயத்ரி ரகுராம். கடந்த பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் பலரால் வெறுக்கப்பட்ட போட்டியாளராக திகழ்ந்தார். அதன்பின் பிரபல கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இணையத்தளத்தில் அரசியலை பற்றி விமர்சித்து வந்த காயத்ரி சில காரணங்களால் அவர் இருந்த கட்சியில் இருந்து விலகினார். ஆன்மீகத்தில் ஈடுபாடு வைத்திருந்த காயத்ரி, கடந்த ஆண்டு மொட்டை அடித்து ஆள் அடையாளம் தெரியாமல் போனார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சுச்சி லீக்ஸ் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
மனிதர்களுக்கு பாசிட்டிவ், ரெகட்டிவ் இருக்கத்தான் செய்யும். யாரையும் சுத்தமானர்கள் என்று கூறமுடியாது. எல்லாருக்கு பல முகம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு, ரெண்டு நாள் பேசுவார்கள், முனாவது நாள் மறந்துவிடுவார்கள். இதுவொரு பெரிய பிரச்சனை கிடையாது. அரசியலுக்காக கூட சுசித்ராவை உசுப்பேற்றி விட்டிருக்கலாம் என்று சொல்வேன்.
என்னை பொறுத்தவரை சுச்சி ஒரு நல்ல மனிதர், அவருடன் நான் யோகா வகுப்பு போயிருக்கிறேன். நன்றாக பாடுவார். ஏதோவொன்றால் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் நமக்கு வரும் போது அது வருத்தமாக இருக்கிறது. சுச்சி யார் பெயரை பயன்படுத்தினாரோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இது மீடியாவுக்கு போகும் அளவிற்கு தேவையில்லை. சுசித்ரா பெரியளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்களிடம் நான் பேசவில்லை, அதில் நான் நுழையவிரும்பவில்லை. இவ்வளவு பெருசாக காரணம் மீடியாவில் அதிகம் பேசியதுதான். இதை நாம் பேசுவதை நிராகரித்துவிடலாம் என்று காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.