செல்வராகவனை விட்டு மனைவி கீதாஞ்சலி பிரிய இதான் காரணம்!! பிரபல கொடுத்த ஷாக்கிங் தகவல்...
இயக்குநர் செல்வராகவன், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை கடந்த 2011ல் இரண்டாம் திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தந்தையானார். சமீபத்தில் இணையத்தில் செல்வராகவன் புகைப்படங்களை கீதாஞ்சலி டெலீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் வெங்கடேஷ்
இதுகுறித்து சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், சொன்ன நேரத்திற்கு படங்களை செய்யாததால் சில தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார்கள். சூர்யாவை வைத்து எடுத்த படம் பிளாப், ஆயிரத்தில் ஒருவன், என் ஜி கே போன்ற படங்களில் ஏற்பட்ட பட்ஜெட் குளறுபடிகள். எந்த தயாரிப்பாளர்களையும் செல்வராகவன் வாழ வைக்கவில்லை. பல தயாரிப்பாளர்களுக்கு நடஷ்டத்தை ஏற்படுத்தினார்.
சொன்ன பட்ஜெட்டில் படங்களை முடிக்காதவர். இது அவரது சினிமா உலக வீழ்ச்சிக்கு காரணம். போதை பழக்கத்திற்கு ஆளாகி, இதய நோய்களும் செல்வராகவனை பாதிப்படைய செய்தது. பின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று அங்கிருந்து மீண்டு வந்தார். இப்போது அவரிடம் எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, நிறைய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஆனால் டைரக்ஷனில் வேகம் எடுக்கவில்லை.

இதனால் துரோகிகள், கடவுள் மீதான நம்பிக்கை போன்ற போஸ்ட்கள் ரசிகர்களை கவலையை ஏற்படுத்திய நிலையில், கீதாஞ்சலி செல்வராகவன் போட்டோக்களை நீக்கியது இருவருக்கும் கருத்து வேறுபாடு, விவாகரத்து என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. முதல் மனைவி சோனியா அகர்வாலை உயிருக்கு உயிராக காதலித்து பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார்.
தனிமையில் அவதிப்பட்டபோது கீதாஞ்சலி அவர் மீது பரிதாபப்பட்டு திருமணம் செய்து 15 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. செல்வராகவனுக்கு நிறைய பிரச்ச்னை, தனுஷ தன் அண்ணனுக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டார், இனி அவர் தான் ஒரு இயக்குநராக நிரூபிக்க வேண்டும், தனுஷும் அவரது பெற்றோரும் தான் செல்வராகவனை மீட்டெடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.