அம்பானியின் ரூ. 15 ஆயிரம் கோடி ஆண்டிலியா வீட்டை விடுங்க!! 600 ஏக்கர் மாந்தோப்பு தெரியுமா..
முகேஷ் அம்பானி
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.
ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது. அந்த வீட்டில் சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்காக நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
600 ஏக்கர் மாந்தோப்பு
இது ஒரு பக்கம் இருக்கட்டும் அம்பானியின் 600 ஏக்கர் மாந்தோப்பு பற்றிய புது தகவல் லீக்காகியுள்ளது. அம்பானி ஒரு மாம்பழம் விரும்பும் பழக்கத்தை கொண்டிருப்பவராம். இந்த பழம் மீதுள்ள விருப்பத்தால் வெறும் சாப்பிடுவதற்காக மட்டுமில்லாமல், ஒரு உலகத்தரம் வாய்ந்த விவசாய முயற்சியாக மாற்றினார் முகேஷ் அம்பானி.
குஜராத்தின் ஜாம்நகரில் இருந்த 600 எக்கர் வறண்ட நிலத்தில், ஒரு பசுமை தோட்டத்தை உருவாக்கி, இன்று அவ்விடத்தில் 1.5 லட்சம் மாம்பழ மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறதாம். 200க்கும் மேற்பட்ட வகையான பழங்கள் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறதாம்.
இந்தியாவில் பிரபலமான அல்போன்சோ, கேசர், ரத்னா போன்ற வகைகளும், வெளிநாடுகளில் இருந்து வந்த டாமி அட்கின்ஸ், கெண்ட் உள்ளிட்ட பழங்களும் விளைவிக்கப்படுகிறதாம். இப்பண்ணையை நீதா அம்பானி தான் பார்வையிட்டு பராமரிக்கிறராம்.
இயக்கையை பாதுகாக்கும் விதமாக தொழில்நுட்பத்தை சார்ந்த பசுமை விவசாய முறைகள் தான் அங்கு பயன்படுத்தப்படுகிறதாம். டிரிப் நீர்ப்பாசனம் மூலம் தான் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துகிறார்களாம்.
600 ஏக்கரில் விளையும் இம்மாம்பழங்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ரிலையன்ஸ் நிறுவனம் ஆசியாவில் மாம்பழ ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த 600 ஏக்கர் மாம்பழ பண்ணை, சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.