சொந்த ஊரில் கல்லா கட்ட ஆரம்பித்த நயன் தாரா!! ஒரேநாளில் இத்தனை கோடியா?
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா திருமணத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். 75வது படத்தில் கமிட்டாகியதை அடுத்து தற்போது 81 வது படத்தின் அப்டேட்டை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.
அப்படி அவர் நடிப்பில் மலையாள மொழியில் திரில்லர் படமாக வெளியாகியுள்ளது கோல்டு மூவி. பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ், நயன் தாரா உள்ளிட்ட பல ர் நடித்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
மலையாள மொழியில் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறதாம். சொந்த ஊர் மலையாள படம் என்றால் மட்டும் குறிப்பிட்ட சம்பளம் வாங்கியும் தமிழ், பாலிவுட் படங்களில் 10 கோடி சம்பளமாகவும் பெற்று வருகிறார்.
அப்படி கோல்ட் படம் கிட்டத்தட்ட 7.8 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் வெளியான முதல் நாளில் 3.4 கோடி அளவில் வசூலித்துள்ளதாம். வெளிநாடுகளில் 1.3 கோடியும் உலகளவில் மொத்தம் ஒரேநாளில் 5 கோடி அளவில் வசூலித்துள்ளது.
படத்தின் கதை அமோக வெற்றியை பெற்றதால் இந்த வாரத்தில் 20 கோடி அளவில் வசூலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.