மூன்றே படம் தான்! தளபதியால் டைரக்சனே வேண்டாமென ஓடிய இயக்குனர்!
நடிகர் விஜய்யின் ஆரம்பகாலகட்ட சினிமா வாழ்க்கையில் பல தோல்விகளை கொடுத்திருந்தாலும் காதல் சம்பந்தப்பட்ட கதை படங்கள் மிகப்பெரிய ஹிட்டானது. அப்படி விஜய்யை வைத்து காதல் கலந்த மாஸ் படத்தினை எடுத்தவர் இயக்குனர் அழகம் பெருமாள் நம்பிநாதன்.
மூன்றே படங்களை இயக்கி சினிமாவில் இயக்கவே வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதில் ஒரு படமாக இருப்பது 2003ல் வெளியான உதயா படம் தான். நடிகர் விஜய், சிம்ரன் ஜோடியாக நடித்து வெளியாகி மிகப்பெரிய பிளாப் படமாக அமைந்தது. ஏற்கனவே டும்டும்டும், ஜூட் படங்களை இயக்கி தோல்வியை கடந்தார்.
மணிரத்னத்தில் உதவி இயக்குனருக்கா இப்படியொரு நிலை என்கிற அளவிற்கு இருந்துவிட்டு இயக்குனர் அவதாரத்தையை கைவிட்டார். அதன்பின் அலைபாயுதே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிகராக வளம் வருகிறார். சமீபத்தில் தெறி, மாஸ்டர், அடங்கமறு, ஹீரோ, கர்ணன் போன்ற படங்களில் நடித்து நடிப்பில் கவனம் செலுத்தியும் வருகிறார்.