15 வருஷத்துக்கு முன் ஜேம்ஸ் வசந்த்-ஐ ஆணவத்தில் அவமானப்படுத்திய இளையராஜா!! உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்..
இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் பலர் கோடிபேர் இருந்தாலும் அவரை பற்றி திட்டித்தீர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இளையராஜா தன்னுடன் நெருங்கி பழகியவர்களிடமே சண்டைப்போட்டு பகைவராக மாற்றிவிட்டு வருகிறார். அந்தவரிசையில் இருப்பவர் தான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
சமீபகாலமாக இளையராஜா குறித்து கண்டபடி திட்டியபடி பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
15 வருடங்களுக்கு முன் வெளியான சுப்ரமணியபுரம் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றினார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கு சூப்பர் ஹிட்டானது.
படத்தின் இடையில் ஒரு காட்சியில் இளையராஜா இசையமைத்த சிறு பொண்மணி அசையும் அதில் தெறிக்கும் என்ற பாடலை அப்படியே வைத்திருப்பார். தன் இசையமைத்த பாடலை தன் அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையில் இருந்து அதனால் வழக்கும் போடுவார் இளையராஜா.
அதேபோல் தான் ஜேம்ஸ் வசந்தன் செய்த செயலை கண்டித்து கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்தி இருக்கிறார். என் அனுமதி இல்லாமல் என் பாடலை பயன்படுத்துவியா என்று கண்டபடி திட்டியதுடன் நோட்டீஸ் அனுப்பி வழக்கும் போட்டிருந்தாராம். இந்த வன்மத்தில் தான் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவை கண்டபடி பேசி அவமானப்படுத்தி வருகிறார் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.