அடம் பிடித்த மனைவி.. பவதாரிணியின் கடைசி ஆசையை தெரியாமல் நிறைவேற்றிய கணவர்.. உதவியாளர் கூறியது..

Ilayaraaja Yuvan Shankar Raja Bhavatharini
By Edward Feb 05, 2024 08:00 AM GMT
Report

இசைஞானி இளையராஜா மகளாக தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக ஜொலித்து வந்த பவதாரிணி, கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் பவதாரிணி பற்றிய அவருடன் இருந்த உதவியாளர் சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அடம் பிடித்த மனைவி.. பவதாரிணியின் கடைசி ஆசையை தெரியாமல் நிறைவேற்றிய கணவர்.. உதவியாளர் கூறியது.. | Ilayaraja Daughter Bhavatharinis Last Minutes

பவதாரிணியின் உதவியாளர் சுரேன், பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில், பவதாரிணி லங்கா மருத்துவமனையில் சற்று உடல் நிலை தேறியதும் அவரது கணவர் அடுத்த நாலே சென்னை செல்ல நினைத்திருந்தார். அவருடன் தானும் மருத்துவமனையில் இருந்ததாகவும் அப்போது அருகில் இருந்த செவிலியரிடம் தன் தந்தை 24 ஆம் தேதி இலங்கை வருகிறார். என்னையும் பார்க்க வருவார். அப்போது உங்களை பார்க்க வைக்கிறேன் என்று நவதாரிணி அவர்களிடம் கூறியிருக்கிறாராம்.

24 ஆம் தேதி இளையரஜா இசைக்கச்சேரிக்காக இலங்கைக்கு வந்தார். என் குழந்தையை பவதாரிணிக்கு அறிமுகம் செய்ததும் நன்றாக பேசினார். இசைக்கற்றுக்கொள்ளும் படியும் அறிவுறுத்தினார். நன்றாக பேசிக்கொண்டிருந்த பவதாரிணிக்கு திடீரென்று ஏன் அத்தனை வலி வந்து மோசமானது என்று தெரியவில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் குணமாகுவார் என்று நம்பினோ. இளையராஜா வந்தது சென்னைக்கு கணவர் சபரி கூட்டிச்செல்லவிருந்தார்.

கண்ணாடி முன் நிற்க வைத்து என் பொண்டாட்டி கேட்ட அந்த வார்த்தை!! பிரபல நடிகர் சொன்ன பதில்

கண்ணாடி முன் நிற்க வைத்து என் பொண்டாட்டி கேட்ட அந்த வார்த்தை!! பிரபல நடிகர் சொன்ன பதில்

இறக்க போகிறோம் என்று முன்பே பவதாரிணிக்கு தெரிந்துவிட்டதா என்று தெரியவில்லை, சென்னைக்கு அழைத்து செல்ல அடம் பிடித்திருக்கிறார். பவதாரிணி அவரது கணவரிடம் அப்பா வந்ததும் பார்த்துவிட்டு, இசைக்கச்சேரி முடியும் வரை இலங்கையில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதேபோல் மனைவியின் ஆசையை மறுக்காமல் இளையராஜா தங்கிருந்த ரூமிற்கு பக்கத்திலேயே ஒரு அறையை புக் செய்திருக்கிறார் கணவர் சபரி.

இளையராஜா கச்சேரிக்கு சென்றுவிட்டு ரூமிற்கு பவதாரிணியும் அவரது கணவரும் சென்றனர். ஹோம் நர்ஸும் வெளியில் காத்திருந்தார். 25 ஆம் தேதி காலை சென்னைக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு வலி அதிகரிக்க லங்கா மருத்துவமனைக்கு மீண்டும் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் சபரி எனக்கு கால் செய்து பவதாரிணி இறந்துவிட்டார் என்று சொன்னதும் உடனடியாக அந்த இடத்திற்கு தானும் சென்றதாகவும் கூறினார்.

பின் பவதாரிணியின் உடலை அங்கிருந்து விமான நிலையத்திற்கு என் பொறுப்பில் கொண்டு சென்றேன். பவதாரிணி அங்கிருந்த செவிலியர்களிடம் கார்த்தி, யுவன் பற்றி அடிக்கடி கூறியிருந்ததாக சுரேன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.