பெத்த புள்ளைங்கள பாக்கல, அதுக்குள்ள இன்னொருத்தர புடிச்சிட்ட! திருமணமான இமானை கேவளப்படுத்திய முன்னால் மனைவி..
இசையமைப்பாளர் டி இமான் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி மோனிகா ரிச்சர்ட்-ஐ விவாகரத்து செய்து பிரியவுள்ளதாக டிசம்பர் மாதம் அறிவித்தார். வெரோனிகா, பிளசிக்கா என்ற இரு மகள் இருக்கும் நிலையில் இமான் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார்.
இரண்டாம் திருமணம்:-
இதனை அடுத்து சில நாட்களுக்கு முன் எமலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மறைந்த அப்பா, அம்மா பேனர்களை வைத்துக்கொண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் நல்லபடியான நடந்தது என்று புகைப்படத்துடன் சிலருக்கு நன்றியையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் இமான்.
புகாரளித்த இமான்:-
மேலும் இரண்டாம் மனைவியின் குழந்தையை தன்னுடைய மூன்றாம் குழந்தையாகவும் ஏற்றார். இந்நிலையில் தன்னுடைய மகள்களின் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக கூறி முன்னாள் மனைவி மோனிகா மிது பொய் வழக்க போடப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் மனைவி காட்டம்:-
இதனைதொடர்ந்து மோனிகா இமான் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறியதோடு, 12 வருடங்களாக வாழ்ந்த மனைவியை எவ்வளவு சுலபமாக தூக்கிவிட்டு இன்னொருத்தரை மாற்றும் உன்னுடன் 12 வருடங்களாக வாழ்ந்தேன் பாரு நான் ஒரு முட்டாள் தான் என்று கூறியுள்ளார்.
மேலும் இரண்டு வருடங்களாக உன் குழந்தையை பார்க்கவில்லை கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலாக இன்னொருத்தரை புடிச்சிட்ட. ஒரு தந்தை ஸ்தானத்தில் என் மகளை என்னால் பாதுக்காக்க முடியும். தேவைப்பட்டாள் புதிய குழந்தையையும் என்னால் பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
நீதிமன்ற விசாரணை:-
இமான் பதிவிட்ட வழக்கினை விசாரித்த நீதிமன்றம், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா உள்ளிட்டவர்கள் இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை வரும் ஜூன் 9 ஆம் தேதிக்கும் தள்ளி வைத்துள்ளனர்.
ஆனால் தொலைந்து போன பாஸ்போர்ட் இமானிடம் தான் இருக்கிறது. அதை கொடுக்க மறுத்ததால் தான் நான் புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
ஏனென்றால் குழந்தைகள் என் கஸ்டடியில் இருப்பதால் அதற்கான உரிமைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்னாள் மனைவிக்காக ஜூவனாம்சமாக இமான் எதுவும் கொடுக்கவில்லையாம். குழந்தைகளுக்காக 5 ஆயிரம் மட்டுமே கொடுத்திருப்பதாகவும் புகாரில் மோனிகா கூறியிருந்தார்.