சமந்தா மீது நாக சைதன்யாவுக்கு இவ்வளவு வன்மமா!! வெளியான நிச்சயதார்த்த ரகசியம்...
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா தற்போது தண்டல் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை சமந்தாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து அவருடன் காதலில் இருந்தார். கடந்த 2017ல் இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2021ல் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட தனியாக வாழ்ந்து வந்தனர்.
அதன்பின் சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் ரகசியமாக இருவரும் அவுட்டிங் சென்று வருவதாகவும் சில புகைப்படங்கள் மூலம் செய்திகள் வைரலானது.
ஆனால் இது உண்மை இல்லை என்று அவர்களின் தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் நடக்க என்ன காரணம் என்ற தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று தான் நாக சைதன்யாவை பிரபோஸ் செய்திருக்கிறாராம். அந்த வன்மம் கொஞ்சம் இருப்பதால் காதலித்து வந்த சோபிதாவை அதே ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள்.
தற்போது இருவரின் நிச்சயதார்த்தம் முடிந்து ஜோடியாக எடுத்த புகைப்படத்தை நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜுனா வெளியிட்டுள்ளார்.

