சூர்யா ரசிகர்கள் செய்த காரியம்! கோபத்தில் திட்டிதீர்க்கும் விநியோஸ்தகர்கள்..
கொரோனா காலகட்டத்தில் சினிமாத்துறை பல இழப்புகளை சந்தித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகிறது. இருந்த போதிலும் படங்கள் திரையில் வெளியிடுவதை சிலர் தவிர்த்து ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அதற்கு காரணம் பெரிய படங்களால் சிறிய படங்களின் பாக்ஸ் ஆபிஸை குறைக்கும்.
ஆனால் தற்போது அதை முன்னணி நடிகர்கள் கூட ஓடிடி தளத்தை நோக்கி போகிறார்கள். இதை நடிகர் சூர்யாவும் பின்பற்றி வருகிறார். சூரரை போற்று படத்தின் ஓடிடி வெளியீடு பிரம்மாண்ட வெற்றியை பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஜெய் பீம் படம் வெளியாகி நல்ல விமர்சனம் மற்றும் கருத்துக்களை கொடுத்து வருகிறது. ஓடிடியில் வெளியானாலும் சூர்யா ரசிகர்கள் அனைவருக்கும் அப்படம் சென்று சேர வேண்டும் என்ற ஆசையில், ஊரில் திரை கட்டி படத்தை ஒட்டி வருகிறார்களாம். இதை சில தியேட்டர் விநியோகம் செய்வோர் கோபத்தில் நடிகர் சூர்யா இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா என்று திட்டிதீர்த்து வருகிறார்கள்.