21 வயது பெண் நடனக்கலைஞர்கள் கொடுத்த புகார்.. 2வது முறை கைதாவாரா ஜானி மாஸ்டர்...
மலையாள சினிமாவில் படவாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லைகள் அதிகளவில் இருப்பதாக ஹேமா கமிட்டி என்பதை உருவாக்கி பல விஷயங்களை அறிக்கை ஒன்றில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது. பல பெண்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்களும் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது.
இதுதொடர்பாக பல பேசி வரும் நிலையில், தென்னிந்திய சினிமாவில் டாப் நடன இயக்குநராக திகழ்ந்து வரும் ஜானி மாஸ்டர் மீது ஒரு பெண் புகாரளித்திருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அல்லு அர்ஜுன், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களின் ஹிட் பாடல்களை கொரியோகிராஃப் செய்து வந்தார்.
சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றார். இந்நிலையில் ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக்கலைஞராக இருந்த் ஒரு பெண் தற்போது தனியாக நடன இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
21 வயதான அப்பெண் துணிச்சலுடன் ஜானி மாஸ்டரால், ஹைதராபாத், சென்னை, மும்பை போன்ற இடங்களில் ஷூட்டிங்கிற்கு சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று கூறியிருக்கிறார். ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2019 நடனக்கலைஞர் சதீஷ் என்பவரை பாலியல் புகாரளித்ததால் 6 மாதங்கள் சிறைவாசம் சென்றிருக்கிறார். சமீபகாலமாகவே அவர்மீது அடிக்கடி தெலுங்கு சினிமாவில் பல குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.