என்னை யாரும் திட்டாதீங்க..இயக்குநராக காரணம் இதுதான்!! ஜேசன் சஞ்சய் செய்த செயல்..
ஜேசன் சஞ்சய்
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து முடிவுக்கு வந்த நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ள சிக்மா படத்தின் பிரமோஷன் நடந்து வருகிறது. பல பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் ஜேசன் சஞ்சய், தந்தை, தாய், சகோதரி பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
அம்மாவுக்கு இப்படி நடந்துவிட்டதால் அப்பாவிடம் பேசுவதை நிறுத்துவிட்டதாகவும், தாய்க்கு ஆதரவாக இருந்து, தான் ஒரு நல்ல மகன் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என தாய்மார்கள் பேசினார்கள்.
என்னை யாரும் திட்டாதீங்க
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையேறி பேசும் போது, இந்த நேரத்தில் என் குடும்பத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றதும் அரங்கமே அதிர்ந்துள்ளது. சில நிமிடம் ஜேசனை பேசவிடாமல் அரங்கில் இருந்தவர்கள் விஜய், விஜய் என்று மகிழ்ச்சியிக் கரகோஷமிட்டார்கள். இதைப்பார்த்த ஜேசன், தம்ஸ்அப் காட்டினார். இதன்மூலம் அப்பா மீது கோபம் இல்லை என்று நிரூபித்துவிட்டார் ஜேசன் என்ற கருத்துக்களும் பரவி வருகிறது.

மேலும், நான் இயக்குநராக போகிறேன் என்பதை முதன்முதலில் அம்மாவிடம் தான் சொன்னேன் என்று தெரிவித்துள்ளார். பின், எந்த படம் உங்களை பயங்கரமாக இன்ஸ்பையர் செய்து இயக்குநராக வைத்தது என்ற கேள்விக்கு, அப்பா படம் தான் என்று சொல்வார்கள் அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.
ஆனால் அதை புரிந்து கொண்ட ஜேசன், என்னை யாரும் திட்டாதீங்க, பிரேசிலிய படமான சிட்டி ஆஃப் காட் படம் தான் நான் இயக்குநராக காரணமாக இருந்தது என்று ஜேசன் தெரிவித்துள்ளார்.