ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்! வரிசையா வந்துட்டே இருக்காங்க..
கடந்த 2016 டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதை அதிரவைத்த செய்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுதான். உடல் நலக்குறைவால் மரணமடைந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் தீபாவளி அன்று மைசூரை சேர்ந்த ஒருவர் தான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அதிர்ச்சியளித்தார்.
நினைவிடத்திற்கு சென்று பிரேமா என்ற பெண் ஜெயலலிதாவின் மகள் என்று அஞ்சலி செலுத்த வந்தேன் என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பு காவலர் அவரை உள்ளே விடவில்லை. அங்கு பேட்டியளித்த அப்பெண் பிரேமா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன் என்றும் பல்லாவரத்தில் தற்போது தங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இத்தனை நாள் எங்கே சென்றீர்கள் என்ற கேள்விக்கு அது சில காரணங்கள் இருக்கிறது என்று குண்டைத்தூக்கி போட்டார். எத்தன பேர் தான் இப்படி கிளம்பி இருக்கிங்க என்று பலர் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
