ஆர்த்தியை கட்டிவைக்க போராடிய ஜெயம் ரவி.. அதுவும் கை நரம்பை அறுக்கும் அளவுக்கு...

Jayam Ravi Gossip Today Divorce Aarti Ravi
By Edward Sep 19, 2024 10:30 PM GMT
Edward

Edward

Report

ஜெயம் ரவி - ஆர்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, அவரின் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி அறிக்கை வெளியிட்டும் நீதிமன்றத்தை நாடியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஆர்த்தியை கட்டிவைக்க போராடிய ஜெயம் ரவி.. அதுவும் கை நரம்பை அறுக்கும் அளவுக்கு... | Jayam Ravi Did The Unbelievable To Marry Aarti

இதுகுறித்து வேதனையுடன் மனைவி ஆர்த்தியும் அறிக்கை வெளியிட்ட நிலையில், ஜெயம் ரவி பாடகி ஒருவரின் சவகாசம் வைத்திருந்ததால் தான் இந்த விரிசலுக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

கோவாவில் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் அறிமுகமான பாடகியுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து ஆர்த்தி கோபப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் தான் ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை கோபத்துடன் டெலீட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவார்கள் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு அவர்களின் காதல் வலுவாக இருந்துள்ளது.

ஆர்த்தியை கட்டிவைக்க போராடிய ஜெயம் ரவி.. அதுவும் கை நரம்பை அறுக்கும் அளவுக்கு... | Jayam Ravi Did The Unbelievable To Marry Aarti

தீராத காதல்

வீட்டிற்கு தெரியாமலும் வெளியுலகத்திற்கு தெரியாமலும் ரகசியமாக காதலித்தார்கள். காதலை வீட்டில் சொன்னதும் ஏற்கவில்லை, இருந்தாலும் எங்கள் காதலுக்கு ஆயுள் அதிகம் என தீர்க்கமாக இருந்து திருமணம் செய்தனர் ஜெயம் ரவி - ஆர்த்தி.

தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பெற்றோரிடம் ஜெயம் ரவி கூறியதும் உடனே அவர்கள் சரி மகனே என்று ஒப்புக்கொள்ளாமல் ஜெயம் ரவி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

ஆர்த்தியை கட்டிவைக்க போராடிய ஜெயம் ரவி.. அதுவும் கை நரம்பை அறுக்கும் அளவுக்கு... | Jayam Ravi Did The Unbelievable To Marry Aarti

அதன்பின் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்காவிட்டால் என் கை நரம்பை கத்தியால் அறுத்துக்கொள்வேன் என்று ஜெயம் ரவி மிரட்டியிருக்கிறார். மகன் கத்தியும் கையுமாக நிற்பதை பார்த்து மிரண்ட, பெற்றோர் அதன்பின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.

ஆர்த்தி மேல் அப்படி உயிராக இருந்த ஜெயம் ரவி, பெங்களூரை சேர்ந்த பாடகியின் வலையில் சிக்கியிருக்கிறார். ஆர்த்தியை பேசக்கூடாது பார்க்கக்கூடாது என்று அந்த பாடகி சொல்லி அதை அப்படியே செய்திருக்கிறார் ஜெயம் ரவி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.