ஸ்ரீதேவி ரொம்பவும் திமிர் பிடித்தவர்.. ஓப்பனாக பேசிய நடிகை ஜெயப்ரதா..

Jayaprada Sridevi Indian Actress
By Edward Oct 03, 2024 03:30 AM GMT
Edward

Edward

Report

90ஸ் காலக்கட்டத்தில் இந்திய சினிமாவின் டாப் நடிகையாகவும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஹீரோயினாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

கடந்த 2018ல் துபாயில் நடந்த உறவினர் திருமணத்திற்காக சென்றபோது ஹோட்டலில் தங்கிய அறையில் குளியலறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ஸ்ரீதேவி ரொம்பவும் திமிர் பிடித்தவர்.. ஓப்பனாக பேசிய நடிகை ஜெயப்ரதா.. | Jayaprada Open About Sridevi Real Face In Shooting

அவரின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், நடிகை ஜெயப்ரதா, ஸ்ரீதேவி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

திமிர் பிடித்தவர்

அதில், நானும் ஸ்ரீதேவியும் படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். அப்போது ஷூட்டிங் சமயத்தில் மட்டும் தான் என்னிடம் அவர் பேசுவார். அவர் திமிராகத்தான் இருப்பார்.

ஏதேனும் சினிமா விழாக்களில் கலந்து கொள்கையில், பார்த்தால் கூட பேசாமல் போய்விடுவார். மேலும் நான் அமர்ந்திருந்தபோது என் அருகே நாற்காலி இருந்தாலும் தள்ளிப்போய்தான் அமர்ந்துகொள்வார்.

ஸ்ரீதேவி ரொம்பவும் திமிர் பிடித்தவர்.. ஓப்பனாக பேசிய நடிகை ஜெயப்ரதா.. | Jayaprada Open About Sridevi Real Face In Shooting

நாங்கள் தொடர்ந்து இணைந்து நடித்தாலும் ஒரு படம் ஆரம்பிக்கிறது என்றால அவரிடம் வந்து இவர் தான் ஜெயப்ரதா என்று மற்றவர்கள் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைப்பார் என்று ஸ்ரீதேவி பற்றி பேசியிருக்கிறார்.