நாலு செவுத்துக்குள் நடந்தது..இந்த பிரச்சனையால் உடல்,மன வேதனை!! ஜாய் கிரிஸில்டா..
ஜாய் கிரிஸில்டா
பிரபல சமையல் கலைஞரும் குக் வித் கோமாளி நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாம் மனைவி ஜாஸ் கிரிஸில்டா இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு விவாகரத்து மற்றும் குழந்தை விவகாரம் குறித்து வழக்கு நடைபெற்று வந்தது. சில மாதங்களுக்கு முன், டிஎன்ஏ ஆய்வில் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்று டிஎன்ஏ டெஸ்ட் வந்தது.

இதனையடுத்து தான் தான் குழந்தைக்கு தந்தை, குழந்தையின் முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார் ரங்கராஜ். இதனையடுத்து தன்னுடைய குழந்தையுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா இணையத்தில் பகிர்ந்தார்.
சமீபத்திய பேட்டியொன்றில், அந்த பிரச்சனையின்போது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், பல கொடுமைகளை அனுபவித்தேன். அந்த சமயத்தில் நான் மிகவும் உடைந்து போனேன். எப்படி எனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்றே தெரியவில்லை. என் குழந்தைக்காக நான் போராட வேண்டும், நாளை அவனுடைய அடையாளம் கேள்விக்குறியாகிவிடக்கூடாது என்ற ஒரேவொரு எண்ணம் மட்டும்தான் என்னை இயக்கியது.

நான் ஒரு அம்மாவாக வெற்றி அடைந்துவிட்டேன் என்று சொல்வதைவிட, என் மகனுக்கு சரியான முகவரியை வாங்கித் தந்துவிட்டேன் என்பதில் பெருமை. இச்சமயம் குறித்து மக்கள் பலவிதமான விமர்சனங்களை பலர் முன் வைத்தார்கள்.
ஆனால் அந்த நாலு செவுத்துக்குள் நான் எப்படி வாழ்க்கை நடத்தினேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும், நானு பேர் பேசுவாங்க, இரண்டு பேர் சேரை போட்டு உட்கார்ந்து, என் கூடவே வாழ்ந்ததுபோல் பேசுவாங்க. இதையெல்லாம் கடந்து, தைரியமாக போராட ஒரே காரணம் என் மகன் ராகா தான். என் மகனுக்காக அப்போதும் நான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா.