நீங்களாம் தமிழ் நடிகர்கள் தானா!! விஜய் அஜித்தை கேவலமாக திட்டிய தயாரிப்பாளர்..
80களில் கொடிக்கட்டி பறந்த தயாரிப்பாளராக கே. ராஜன் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். சினிமா படங்களில் விழாக்களில் கலந்து கொண்டு தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசியும் வருகிறார்.
வெளி மாநிலங்களின் படப்பிடிப்பு
அந்தவகையில் கஞ்சா கருப்பு காமெடி ரோலில் நடித்துள்ள ஓங்காரம் என்ற படத்தின் ஆடியோ லான்சிற்கு சென்று வெளி மாநிலங்களின் படப்பிடிப்பு வைக்கும் நடிகர்களை பற்றி படுமோசமாக பேசி அசிங்கப்படுத்தியுள்ளார். அதில், விஜய்யின் வாரிசு, அஜித்தின் ஏகே61 போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு வெளி மாநிலத்தில் ஏன் வைக்கிறார்கள். இங்குள்ள 30 ஆயிரம் பணியாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும். நீங்களாம் தமிழ் நடிகர்கள் தானா, சம்பளம் மட்டும் கோடிக்கணக்கில் வாங்கிட்டு இப்படி செய்கிறீங்களே என்று கேட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் ஷூட்டிங்
மேலும் மணிரத்னம் சிறந்த இயக்குனர், ஆனால் அவரின் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கை ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் ஏன் வைத்தார். அந்த படம் தமிழ் படம் தானே இங்கு தான் ஷூட்டிங் வைத்தால் என்ன என்று கடுமையாக திட்டி பேசியுள்ளார். அப்படத்தின் நாயகி 1 லட்சம் கொடுத்தால் தான் ஆடியோ லான்சிற்கு வருவேன் என்று கூறியதை திட்டி இருக்கிறார் கே ராஜன்.