ரேகா நாயருக்கு போர்வை போட்டு மேடையில் கதறி அழுத தயாரிப்பாளர்..

S J Surya Yashika Aannand Bayilvan Ranganathan
By Edward Aug 09, 2022 11:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளராக இருந்து வருபவர் கே ராஜன். சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் எப்படி எல்லாம் கஷ்டபடுகிறார்கள் நடிகர் நடிகைகளால் நடுத்தெருவுக்கு தள்ளப்படுவதை எண்ணி கஷ்டப்படுகிறேன் என்று பல மேடைகளை கூறி ஏங்கி வருகிறார்.

அதிலும் நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை பேசி கேவலமான செயலில் ஈடுபடும் பயில்வான் ரங்கநாதனை எதிர்த்து பேசியும் வருகிறார். சமீபத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த கடமையை செய் என்ற படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கே ராஜன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்போது எஸ் ஜே சூர்யாவை புகழ்ந்து பேசி வந்த கே ராஜன் அவர்கள், ரேகா நாயருக்கு மாலை அணிவித்தேன். இவள் வீரமங்கை என்று ரேகா நாயரை புகழ்ந்து பேசினார்.

மேலும் தாய்மையை பற்றி பேசிய கே ராஜன், என் அம்மா அவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் எங்களை வளர்த்தால். ஆனால் சில ஈனப்பிரவிகள் பெண்களை அவமானப்படுத்தி வருகிறார்கள் என்று கடுமையாக திட்டித்தீர்த்துள்ளார்.