பாடமறுத்த பாடகி சித்ரா!! வாழ்க்கையை மாற்றிய இசைஞானி இளையராஜா..
இந்திய சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து பல ஆயிரக்கணக்கான பாடலுக்கு சொந்தக்காரராக இருப்பவர் தான் இளையராஜா. பல இசைக்கலைஞர்களை உருவாக்கிய இசைஞானி சிலரிடம் ஆணவத்தில் நடந்து கொண்டதை வைத்து அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இசைஞானி என்ன செய்தாலும் அது நல்லதுக்கு தான் என்று கூறும் பிரபலங்களும் உண்டு.
அப்படி டாப் பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் கே எஸ் சித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார். நான் ஒரு சிந்து காவெடி சிந்து என்ற பாடலை பாடி முடித்துவிட்டதும், ராஜா சார் என்னை இன்னொரு பாடல் இருக்கு பாடி கொடுக்க முடியுமா என்று கேட்டார். அடுத்த நாள் எனக்கு எம்.ஏ முதலாம் ஆண்டிற்கான முதல் தேர்வு நடக்கும் நேரம்.
எக்ஸாம் இருக்கு சார் என்று சொன்னதும் எம்.ஏ எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம், அதுக்கு மேலே இதுல வரப்போகுது என்று என் அப்பாவிடம் இளையராஜா கூறினார். பெரியவர் சொல்லும் போது அதை நிராகரிக்கூடாது என்று எம் அம்மாவிடம் பேசினார்கள்.
என் அம்மா சமாளித்த அப்பா என்னிடம், அதை பண்ணிட்டு நீ டிகிரியை விட்டுற கூடாது என்று கேட்டார். நானும் கொஞ்சம் சோம்பேறி, அந்த எக்ஸாமுக்கு போகவே இல்லை, வேறொரு மொழியில் பாட்டு பாட பிஸியாகிவிட்டேன் என்று சித்ரா ஓப்பனாக பேசியிருக்கிறார்.