நிஜமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர்

Kaathuvaakula Rendu Kaadhal
By Parthiban.A Jun 21, 2022 09:00 AM GMT
Parthiban.A

Parthiban.A

Report

விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டியது. 70 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என இருவரையும் ஒரே நேரத்தில் காதலிப்பார். ஆனால் அவர்கள் இருவரையுமே திருமணம் செய்ய நினைக்கும் அவரது திட்டம் என்னவானது என்பது தான் படத்தில் க்ளைமாக்ஸாக இருக்கும்.

தற்போது இந்த படத்தின் கதை போலவே நிஜத்தில் ஒரு சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது. சந்தீப் என்ற நபர் தான் காதலித்த இருவரையுமே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது.  

Gallery